தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவன்..!!
Read Time:1 Minute, 5 Second
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரீஸ் என்ற மாணவர் அங்குள்ள கல்லூரியில் வணிகவியல் படித்து வருகிறார். அவருக்கான பல்கலைக்கழக தேர்வுகள் சில நாட்களில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக தேர்வுகளுக்கு தயாராகி வந்த ஹரீஸ் தேர்வை சரியாக எழுதிவிடுவோமா என்ற பயத்தாலும், மன அழுத்தத்தாலும் நேற்று வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீடு திரும்பிய அவரது பெற்றோர் ஹரீஸின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
நன்றாக படிக்கும் மாணவனான ஹரீஸ் கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Average Rating