திருமண நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவியின் கழுத்து எலும்பை முறித்த கணவன்..!!

Read Time:3 Minute, 54 Second

sdfsfsdதிரும­ண­மான முத­லி­ர­வன்று மனைவி உட­லு­ற­வுக்கு மறுத்ததால் கணவன் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கி தாக்கி கழுத்து எலும்பை முறித்த சம்­ப­வ­மொன்று பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது.

கராச்­சியில் இருக்கும் அப்­பாஸி ஷாகீத் வைத்­தி­ய­சா­லையில் மருத்­துவம் பயிலும் மாணவர். ஓரிரு வாரங்­க­ளுக்கு முன்னர் ரேடி­யோ­லாஜி துறையில் ஒரு பெண்ணை சந்­தித்­துள்ளார்.

கையில் மரு­தாணி மறை­யாத நிலையில், திரு­ம­ணத்­துக்கு செய்த மேக்கப் கலை­யாத நிலையில் முகத்தில் காயங்­க­ளோடும், கை, கால்­களில் சிராய்ப்­பு­க­ளோடும் அவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்­துள்ளார்.

கண்­களில் கண்ணீர் ததும்­பிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் அருகில் ஓர் ஆண் இருந்­துள்ளார். அந்த ஆணிடம் அந்த மருத்­துவ மாணவர் என்ன நடந்­தது என கேட்­ட­மைக்கு, அந்த ஆணிடம் இருந்து ஒன்றும் நடக்­க­வில்லை, கணவன் மனை­விக்குள் ஏதோ பிரச்­சினை என்ற பதில் மட்­டுமே கிடைத்­துள்­ளது. உடன் இருந்­தவர் அந்தப் பெண்ணின் சகோ­தரர் என்ற தக­வலும் கிடைத்­தது.

அப்­போது “என்ன நடந்­தது என்ற உண்­மையைக் கூறும் மன­நி­லையில் அந்தப் பெண்ணின் சகோ­தரர் இல்லை என்­பது மட்டும் உணர முடிந்­துள்­ளது…”

“உங்­க­ளுக்கு என்ன நடந்­தது?” என கேட்டு முடிக்கும் முன்­னரே அந்தப் பெண்ணின் கண்­களில் கண்ணீர் இன்னும் அதி­க­மாக வெளி­வரத் தொடங்­கி­யுள்­ளது. சிறிய மௌனத்­துக்கு பின்னர், “என் கணவர் என்னை கற்­ப­ழித்­து­விட்டார், என்னை கடு­மை­யாக தாக்­கினார்..” என நடந்­ததை கூறி­யுள்ளார்.

” நேற்­றி­ரவு தான் எனக்கு திரு­மணம் நடந்­தது. என் கணவர் உட­லு­றவில் ஈடு­பட அணு­கினார். ஆனால், நான் உடல்­ந­லத்­துடன் இல்லை. இன்று மாத­விடாய் எனக் கூறினேன்.

அதற்கு அவர், இதெல்லாம் பெரிய விடயம் அல்ல எனக் கூறி உட­லு­றவில் ஈடு­பட அழைத்தார்.”
“நான் அதனைத் தடுத்தேன். முடி­யாது என்றேன்.

உடனே கோபம் அடைந்த என கணவர் என்னைத் தாக்கத் தொடங்­கினார். அதன் பின்னர் என்னை கற்­ப­ழித்தார். அதன் பின்­னரும் தொடர்ந்து பெல்ட் கொண்டு என்னை அடித்து துன்­பு­றுத்­தினார். நான் அழுது கெஞ்சிக் கேட்டும் கூட அவர் என்னை அடிப்­பதை நிறுத்­த­வில்லை. இதனால் என் கழுத்து எலும்பு உடைந்­தது.”

மருத்­துவ பரி­சோ­த­னையில் அந்தப் பெண்ணின் கணவர் தாக்­கி­யதில், அந்த பெண்ணின் கழுத்துப் பட்டை எலும்பில் முறிவு ஏற்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த சம்­ப­வத்தைக் கேட்ட மருத்­துவ மாணவர் உடனே கணவர் மீது பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பரஸ்பர ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு 46.9 சதவீதப் பெண்கள் ஆளாவதாக கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரொமேன்ஸ் படங்களில் நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!
Next post 3 நாட்களில் ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத பண்ணுங்க..!!