திருமண நாளில் உடலுறவுக்கு மறுத்த மனைவியின் கழுத்து எலும்பை முறித்த கணவன்..!!
திருமணமான முதலிரவன்று மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் கணவன் வல்லுறவுக்குள்ளாக்கி தாக்கி கழுத்து எலும்பை முறித்த சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
கராச்சியில் இருக்கும் அப்பாஸி ஷாகீத் வைத்தியசாலையில் மருத்துவம் பயிலும் மாணவர். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ரேடியோலாஜி துறையில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார்.
கையில் மருதாணி மறையாத நிலையில், திருமணத்துக்கு செய்த மேக்கப் கலையாத நிலையில் முகத்தில் காயங்களோடும், கை, கால்களில் சிராய்ப்புகளோடும் அவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கண்களில் கண்ணீர் ததும்பிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் அருகில் ஓர் ஆண் இருந்துள்ளார். அந்த ஆணிடம் அந்த மருத்துவ மாணவர் என்ன நடந்தது என கேட்டமைக்கு, அந்த ஆணிடம் இருந்து ஒன்றும் நடக்கவில்லை, கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சினை என்ற பதில் மட்டுமே கிடைத்துள்ளது. உடன் இருந்தவர் அந்தப் பெண்ணின் சகோதரர் என்ற தகவலும் கிடைத்தது.
அப்போது “என்ன நடந்தது என்ற உண்மையைக் கூறும் மனநிலையில் அந்தப் பெண்ணின் சகோதரர் இல்லை என்பது மட்டும் உணர முடிந்துள்ளது…”
“உங்களுக்கு என்ன நடந்தது?” என கேட்டு முடிக்கும் முன்னரே அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் இன்னும் அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சிறிய மௌனத்துக்கு பின்னர், “என் கணவர் என்னை கற்பழித்துவிட்டார், என்னை கடுமையாக தாக்கினார்..” என நடந்ததை கூறியுள்ளார்.
” நேற்றிரவு தான் எனக்கு திருமணம் நடந்தது. என் கணவர் உடலுறவில் ஈடுபட அணுகினார். ஆனால், நான் உடல்நலத்துடன் இல்லை. இன்று மாதவிடாய் எனக் கூறினேன்.
அதற்கு அவர், இதெல்லாம் பெரிய விடயம் அல்ல எனக் கூறி உடலுறவில் ஈடுபட அழைத்தார்.”
“நான் அதனைத் தடுத்தேன். முடியாது என்றேன்.
உடனே கோபம் அடைந்த என கணவர் என்னைத் தாக்கத் தொடங்கினார். அதன் பின்னர் என்னை கற்பழித்தார். அதன் பின்னரும் தொடர்ந்து பெல்ட் கொண்டு என்னை அடித்து துன்புறுத்தினார். நான் அழுது கெஞ்சிக் கேட்டும் கூட அவர் என்னை அடிப்பதை நிறுத்தவில்லை. இதனால் என் கழுத்து எலும்பு உடைந்தது.”
மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணின் கணவர் தாக்கியதில், அந்த பெண்ணின் கழுத்துப் பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தைக் கேட்ட மருத்துவ மாணவர் உடனே கணவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பரஸ்பர ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு 46.9 சதவீதப் பெண்கள் ஆளாவதாக கூறப்பட்டுள்ளது.
Average Rating