இறந்த பெண் பிணத்தை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி..!!
தமிழகத்தில் இறந்த பெண் பிணத்தை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(33). இவர் மாந்ரீகம், பில்லி சூனியம் மற்றும் ஆண், பெண் வசியம் போன்ற பல மர்மமான வேலைகளை செய்துள்ளார். இதில் இவரது நண்பர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது.
இதை இவர்கள் சுமார் 3 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இவரிடம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அருகில் உள்ளவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கார்த்திக்கின் வீட்டிற்கு வந்த பொலிசார் அவரது வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது இறந்து மூன்று மாதம் ஆன ஒரு பெண் பிணத்தை வைத்து கார்த்திக் மாந்திரீகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, சென்னையில் இருந்து பெண் உடலை விலைக்கு வாங்கியதாக கூறியுள்ளார்.
மேலும் இப்பெண் கொலை செய்யப்பட்டாரா, இல்லை இதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கார்த்திக் உட்பட நான்கு பேர்களை பொலிசார் உடனடியாக கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Average Rating