என்னுடைய வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு: விஷாலை கடுமையாக தாக்கிய சேரன்..!!

Read Time:15 Minute, 26 Second

201703121810542838_director-Cheran-condemn-to-actor-Vishal_SECVPFதயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால், சமீபகாலமாக பேசிவரும் சில மேடைப் பேச்சுக்களால் பலரது கண்டனத்திற்கும் ஆளாகி வருகிறார். கடந்த வாரம் தயாரிப்பாளர்கள் அனைவரும் பிச்சை எடுக்கிறார்கள் என்கிற ரீதியில் பேசிய விஷாலின் பேச்சுக்கு கொந்தளித்த தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்றை நடத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

அந்த பிரச்சினை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டார் விஷால். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த விஷால், சேரன் தற்போது ரொம்பவும் சிரமத்தில் இருப்பதாகவும், அவருக்கு மாதந்தோறும் 5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு பேசியுள்ளார். விஷாலின் இந்த பேச்சை கேட்ட சேரன் கொதித்தெழுந்துள்ளார். என்னுடைய வாழ்க்கையில் தலையிட இவர் யார்? என்பன போன்ற பல கண்டனங்களை 7 பக்க கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.

சேரன், விஷாலுக்கு எழுதிய கடிதத்தின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்..

என்ன ஆச்சு உங்களுக்கு நல்லாத்தானே இருந்தீங்க… என்ன பேசறோம், என்ன செய்யறோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப்போனீங்களே ஏன்? நீங்க பேசறதையெல்லாம் மீடியாக்கள் காட்றாங்கனு என்னமோ நீங்கதான் இந்த உலகத்தை காக்க வந்த ஆபத்பாந்தவனா நினைச்சுக்கிட்டு பேசற பேச்சு செய்ற செயல் எல்லோரையும் எப்படியெல்லாம் காயப்படுத்துதுனு தெரியுமா?

ஒரே ஒரு பதவிதான்… நடிகர் சங்க பொதுச்செயலாளர்.

வெறும் மூவாயிரம் உறுப்பினர்களுக்குள்ள நடந்த தேர்தல்ல ஜெயித்தவர் நீங்க. அதுவும் ஜே.கே.ரித்தீஷ் உங்களை ஜெயிக்க வைக்க என்னவெல்லாம் செய்தார். உங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் எப்படி கிடைத்ததுனு இப்ப ரித்தீஷ் அவர்களை பேச சொல்லலாமா? அந்த பதவிக்கு வந்தது தவிர நீங்கள் சாதித்தது என்ன?

நீங்க நடிச்ச படங்கள்லகூட ஒரே ஒரு படம் இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படம் நடிச்சேன்னு சொல்ல முடியுமா? மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. இதை புகழ்போதைன்னுகூட சொல்ல முடியாது. ஒருவகையான வியாதி. ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

இப்போ தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல போட்டியிடுறிங்க. அதுவும் தலைவர்னு சொல்றீங்க. ஏன் உங்களுக்கு இந்த பதவி ஆசை… நாம ஏற்கனெவே நடிகர் சங்கத்துல பொதுச்செயலாளரா இருக்கோ. அதுலயே இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சொன்ன வாக்குறுதிகளில் 80 சதவீதம்கூட இன்னும் செய்து முடிக்கல. தயாரிப்பாளர் சங்கத்துல மாற்றம் வேணும்னு நினைச்சா? ஒரு நல்ல தயாரிப்பாளர முன்னிருத்தி அவருக்கு ஆதரவு கொடுத்து மாற்றத்தை உருவாக்கலாம். அதுதானே மாற்றத்தை விரும்புவதற்கு அழகு. ஏன் அப்படி உங்களுக்கு செய்யத் தோணலை? ஏன்ன பதவி வெறி. எல்லாத்துலயும் தானே தலைவரா இருக்கணும். தான் ஒருத்தர்தான் எல்லாத்தையும் செய்யமுடியும்னு நினைக்கிறது. பூனைக்கு கண்ண கட்டுன கதையா தெரியலையா? இது உங்களோட அறிவின்மையைதான் காட்டுது.

எத்தனையோ நடிகர்கள் படம் தயாரிச்ச அனுபவங்களோட உங்க சங்கத்துலயே இருக்காங்களே…! அவங்கள நிறுத்தி ஆதரவு கொடுத்து ஜெயிக்க வச்சு சங்கத்துல மாற்றத்தை கொண்டுவர நினைச்சிருக்கலாமே. அதவிட்டுட்டு அங்கயும் நான்தான், இங்கயும் நான்தான், எங்கேயும் நான்தான்னா நல்லாவா இருக்கு?

நடிகர் சங்கத்துலயே நீங்க சொன்ன எல்லாத்தையும் செஞ்சீட்டிங்களா? பொங்கலுக்கு இனிப்பு, காரம், துணி அப்புறம் வெப்சைட்டில் மாற்றம் இதுதவிர என்ன நீங்க சொன்னத செஞ்சீங்கனுன்னு சொல்ல முடியுமா? நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கல. ஏற்கெனவே இருந்த பிளான ஆரம்பிச்சிருந்தாகூட இந்நேரம் பாதி வேலைகள் முடிஞ்சிருக்கும். இந்த இயலாமைக்கு காரணம் என்னனு தெரியுமா? உங்களே அதிக பிரசங்கத்தினமான பேச்சுதான். இது அரசியல் சார்ந்த உலகம். உங்களோட பேச்சும், செயலும் ஏற்படுத்தற வெறுப்பு அந்த சங்கத்தையே பாதிக்குதுங்கிற உண்மைய நீங்க உணரணும் விஷால்.

இப்படி நடிகர் சங்கத்துல இருக்குற வேலைகளையே செய்து முடிக்க முடியாத நீங்க எதற்காக தயாரிப்பாளர் சங்கத்துலயும் நான்தான் வரணும்னு நினைக்கிறீங்கன்னு தெரியல. அந்த சங்கத்த பற்றியும், அதில் உள்ள இடர்பாடுகள் பற்றியும் அதை களைய தேவைப்படும் உழைப்பு பற்றியும், அதற்கு எடுக்கும் நாட்கள் பற்றியும் எவ்விதமான முன்யோசனையும் உங்களுக்கு இல்லைங்கிறததான் உங்களோட நடவடிக்கையும், வீம்பும் உணர்த்துது.

கேட்டா.. இலவங்களை அறிவித்து, பணத்தை காட்டி ஓட்டை வாங்கிரலாம்னு ஒரு தப்பு கணக்கு போடுறீங்க.

அதுக்கு வாக்களர்களுக்கு நிலம் இலவசம்னு அறிக்கை…
அது எப்படி சாத்தியம்.
அது எந்த இடத்துல.. எந்த ஊர்ல…
அதுக்கான பணம் தயாரிப்பாளர் சங்கத்துல எங்க இருக்கு…
அந்த நிதி வருவதற்கு என்ன சாத்தியம்..
அதை நடைமுறைப்படுத்தவது எப்படினு சொல்லுங்க…
இது எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லி திட்டங்களை சொல்லணும்.

தம்பி, இங்க இருக்குறவங்க… தமிழக வாக்காளர்கள் இல்லை. உங்க பணத்தை வாங்கிக்கிட்டு ஓட்டு போட்ட நாடக நடிகர்கள், ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் இல்லை. அத்தனை பேரும் தயாரிப்பாளர்கள். குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுத்துட்டு தன்னை கோடீஸ்வரர்களாக அடையாளப்படுத்திட்டு உட்கார்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு தேவை நலத்திட்டங்கள் இல்லை.. நல்ல தொழில். எல்லோருக்கும் தொழில். அது சிறப்பாக நடப்பதற்கான திட்டங்கள்.. அதை சொல்லாம எல்லோருக்கும் நிலம் இலவசம்னா.. எவ்வளவு பிச்சைக்காரர்களாக நினைச்சிருக்கீங்க தயாரிப்பார்களை…

நிலத்த வாங்கி குடுத்துட்டா, வீட்டை யாரு கட்டிக் குடுப்பா?

வீட்ட கட்டி குடுத்துட்டா? குடும்பம் நடத்த செலவுகளை பார்த்துக்கொள்ள என்ன செய்வாங்க…

உங்கள வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில் இருக்காங்கனு தெரியுமா? உங்க படத்தோட ஓப்பனிங் ஷோவுல உங்களுக்கு கைதட்டக்கூட ஆள் இல்ல. ஆனா நீங்க வாங்குற சம்பளம் எவ்வளவு? எவ்வளவு பேசுறீங்க.. அதை நியாயமா வாங்கிருந்த உங்கள வச்சு படம் பண்ண தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாம எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க? உங்கள அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நீங்க செய்தது என்ன? அவர் இப்போ மிக மிக நெருக்கடியில்தான் இருக்காரு. அந்த தயாரிப்பாளரை பற்றி உங்களுக்கு கவலையோ, அக்கறையோ இல்ல.. அந்த சிறு நன்றியக்கூட நினைக்காத நீங்க எப்படி சிறு படத்தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை பற்றி பேசுறீங்க.

அப்புறம்.. கமல் சாருக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்னு பேட்டி வேற… என்ன திமிர் உங்களுக்கு, என்ன ஆணவம். கமல் சாருக்கு நீங்க யாருங்க? அவருக்கு ஒன்னுனா இந்த உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்க அத பாத்துக்க… அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவரை நீங்க கூட நின்னு காப்பாத்தற அளவுக்கு அவர் புகழும், தகுதியும் குறைந்தது இல்லை. பித்து தலைக்கேறிய பேச்சு அது. விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனை அப்போ நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீங்க! அப்போது நீங்கள் கமல் ரசிகர் இல்லையா? அல்ல அப்போ உங்களுக்கு அரசியலுக்கு வரணும்னு ஐடியா இல்லையா?

அப்புறம்… நான் ஏதோ கஷ்டப்படுறேன். படம் எதுவும் இல்லை, மாசம் 5000 ரூபாய் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கணும்னு சொல்றீங்க… உங்க படத்தல நீங்க பண்ணு காமெடிய விட இதுக்கு தான் ரொம்ப சிரிப்பு வருது. பொருளாதார ரீதியா எனககு கஷ்டம்தான். இல்லனு சொல்லல. ஆனா அது என் வாழ்க்கை.. அதுல தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு விஷால். நான் நான் என்று பேசல. ஆனா சொல்லவேண்டிய நிலை. என்னோட படங்களுககு முன்னால உங்கள் படங்கள் ஒப்பீடு செய்யவே தகுதி இல்லாதவைனு என்னால திமிரா சொல்ல முடியும். இந்த சமூகமும், தமிழ் மக்களும் எனக்கு அந்த அங்கீகாரத்த கொடுத்திருக்காங்க. நான் கஷ்டபடுறேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா? இலல வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டேனா… எனக்கு 5000 கொடுததா என் பிரச்சினை தீர்ந்திடும்னா உங்களுக்கும் இனிமேல் 5000 சம்பாதிச்சா போதும்ல… ஒரு படத்துக்கு 6 மாசம் நீங்க உழைக்கிறீங்கன்னு வைங்க, அப்போ இனிமேல் 30 ஆயிரம் ரூபாய்தான் உங்களுக்கு சம்பளம். அத வாங்கிக்கிட்டு நீங்க நடிக்கணும் தயாரா?

ஒரு விஷயம் தெரியுமா? இப்ப நான் படம் பண்ண போறேன். என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் நீங்க நல்லா வரணும்சார்.. நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஒருத்தர் வந்தாரு பாருங்க.. கதையை கேட்டுட்டு, நான் தேதி தரேன் சார், நாம பண்ணலாம் சார் அப்டின்னு ஒரு நடிகர் சொன்னாரு பாத்தீங்களா? அதுதான் மனிதாபிமானம். உதவி, மாற்று வழி… அந்த மனிதன்தான் விஜய் சேதுபதி. அவர்தான் சரியான மனுஷன். ஒரு மனுஷனோட பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னனு பாக்குற மனிதத்தன்மை. அவருக்கு நான் தலைவணங்கலாம் எத்தனை முறை வேணும்னாலும். தேதி கொடுத்ததுக்கு அல்ல. பிறர் துன்பம் புரிந்து அதை துடைக்க வந்த நல்ல மனசுக்கு. வருது சார் என்னோட படம். திரும்ப எங்க வேலையை பாக்க போறோம். அதுனால நீங்க என்னைப் பற்றி இனிமே கவலைப்பட வேண்டாம்.

கடைசியாக ஒன்று…

தொழிற்சங்க விதிகளும், முதலீட்டாளர்கள் அமைப்பின் விதிகளும் தெரியுமா உங்களுக்கு… ஒரு நிறுவனத்தின் முதலாளி ஏன் தொழிற்சங்கத்தின் தலைவனாக எப்போதும் இருப்பதில்லை. அப்படி முதலாளிகளா இருக்க முடியும்னா உலகத்துல இருக்குற எல்லா பெரிய நிறுவனங்களோட தொழிற்சங்க அமைப்பின் முதலாளிகளும் அவங்க தொழிற்சங்கங்களுக்கு தலைவர்களாகத்தான் இருப்பாங்க. இந்த இரண்டு சாதியுமே வேற வேற…

சரி விடுங்கள்.. அது உங்களுக்கு புரியாது. சொன்னா புரிஞ்சுக்குற இடத்துலயும் நீங்க இல்ல.. இன்னும் என்னென்ன கன்றாவி காட்சிகளை தமிழர்களா பொறந்த பாவத்துக்கு நாங்க பாத்து தொலைக்கணுமோ பாக்குறோம்..

நன்றி உங்கள் கருணைக்கு.

மரியாதையுடன் சேரன்…

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ்..!!
Next post தலைமுடிக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா?..!!