நண்பனை வீட்டிற்கு அழைத்து வந்து மனைவியை விருந்தாக்கிய கணவர்: அதிர்ச்சி தரும் காரணம்..!! (வீடியோ)
தெலுங்கானாவில் சொந்த மனைவியையே தனது நண்பனுக்கு இரையாக்கிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சலீம் மொகைதீன்(30). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பின்னர் சலீம் உயர்படிப்பிற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தன் மனைவியிடம் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார்.
அவ்வப்போது ஆபாசமான முறையில் பேசி மனைவியை நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாரும் கூறி வந்துள்ளார். அதை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகளை அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சலீம் கடந்த மாதம் ஹைதரபாத் திரும்பியுள்ளார். அதன் பின்னர் அவர் சில தினங்களுக்கு முன்னர் தன் நண்பரான முகமதுஷானை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அதன்பின்னர் சலீம் தன் மனைவிக்கு மயக்க மருந்து சொக்லேட் கொடுத்துள்ளார். இதை பயன்படுத்தி நண்பரான முகமதுஷானை தன் மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் படி கூறியுள்ளார். இதை சலீம் வீடியோவாக எடுத்து பதிவு செய்து வைத்துள்ளார்.
அந்த வீடியோவை வைத்துக் கொண்டு தான் கூறும் நண்பர்களுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என மனைவியை மிரட்டி வந்துள்ளார். இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளான சலீம் மனைவி கடந்த திங்கட்கிழமை பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் பொலிசார் சலீம் மற்றும் அவரது தாயாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை அறிந்த முகமதுஷான் தலைமறைவாகியுள்ளதால், பொலிசார் அவரை தேடிவருகின்றனர்.
Average Rating