கோலாப்பூரில் தீபிகா படுகோனே படப்பிடிப்பு தளம் சூறை..!!

Read Time:2 Minute, 42 Second

201703160921269029_Deepika-Padukone-Filming-location-spoil-in-Kolhapur_SECVPFபிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் ஒரு இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இது ஒரு வரலாற்றுப்படம். இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடிக்கிறார்.

இந்த படத்துக்காக கோலாப்பூர் மாவட்டம் மசாய் பத்தார் என்ற இடத்தில் தளம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு அந்த படப்பிடிப்பு தளத்திற்குள், அடையாளம் தெரியாத 15 முதல் 20 பேர் நுழைந்து சூறையாடினர். அத்துடன் நடிகர், நடிகைகளின் உடைகளையும், குதிரைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனத்தையும் தீயிட்டுக்கொளுத்தினர்.

கோலாப்பூரில் படப்பிடிப்பு தளம் தீவைத்து சூறையாடப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.

அவர்களில் 2 பேரை படப்பிடிப்பு குழுவினர் பிடித்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், படப்பிடிப்பு குழுவினரை தாக்கி அவர்களை தப்ப வைத்தனர். படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்களுக்கும் அந்த கும்பல் தீ வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை தொடர்ந்து அந்த கும்பலினர் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த கோலாப்பூர் சரக ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்து பேசினர்.

இதனிடையே, சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய மந்திரி தீபக் கேசர்கர், “இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்குமாறு திரைப்பட தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறோம். போலீசார் வழக்குப்பதிவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து உள்துறை விசாரணைக்கு உத்தரவிடும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கி சாதனை..!! (வீடியோ)
Next post பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம் : பிரான்ஸில் பயங்கரம்..!! (வீடியோ)