நடுரோட்டில் மகனின் கழுத்தை அழுத்தி கட்டிப்போட்ட தாய்: கொடூர சம்பவம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 23 Second
தாய்லாந்தில் 5 வயது மகனை பிளாஸ்டிக் கயிறால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய தாயின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள பாங்காக் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதில் இளம் தாய் ஒருவர் சாலையில் உள்ள இரும்பு தூண் அருகே தன்னுடைய 5 வயது மகனின் தலையில் தன் காலை வைத்து அழுத்துகிறார்.
பின்னர் பிளாஸ்டிக் கயிறால் சிறுவனின் தலை, கைப்பகுதியை தூணுடன் இணைத்து கட்டுகிறார்.
இந்த சமயத்தில், அழும் சிறுவன். என்னால் மூச்சு விடமுடியவில்லை என கதறுவது போல வீடியோவில் உள்ளது.
இதை அருகிலிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் இதுவரை 2 மில்லியன் தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பொலிசார், இரக்கமற்ற செயலை செய்த அந்த பெண்ணை தற்போது தேடி வருகிறார்கள்.
Average Rating