பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல: வித்யாபாலன்..!!

Read Time:2 Minute, 57 Second

201703211128371881_Women-not-not-a-machine-for-child-birth-Vidya-Balan_SECVPFநடிகை வித்யாபாலன் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

“திருமணமான நடிகைகளை யார் பார்த்தாலும் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று கேட்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இப்படி கேட்பது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்தியாவை தவிர வேறு எந்த நாடுகளிலும் இதுபோல் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து தம்பதிகளிடம் யாரும் விசாரிப்பது இல்லை.

குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டும்தான் பெண்களா? குழந்தைகளை பெற்றுப்போடும் எந்திரங்கள் அல்ல பெண்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உலகில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. இதில் கொஞ்சம் பேர் குழந்தை இல்லாமல் இருப்பது நல்லதுதான்.

குடும்ப விஷயங்கள், குழந்தை என்பதெல்லாம் நானும் எனது கணவரும் சம்பந்தப்பட்டவை. குழந்தை இப்போது வேண்டுமா வேண்டாமா? எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் நாங்கள்தான் தீர்மானிப்போம். இதில் மற்றவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது. எனக்கு திருமணமான அன்று உறவினர் ஒருவர் வாழ்த்த வந்தார்.

என்னையும் எனது கணவரையும் பார்த்து அடுத்த முறை உங்களை சந்திக்கும்போது நீங்கள் மூன்று பேராக இருக்க வேண்டும் என்றார். அதை கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. இருவரும் அவரை பார்த்து சிரித்துக்கொண்டோம். அப்போது நாங்கள் தேனிலவுக்கு எங்கே செல்வது என்று கூட முடிவு செய்யவில்லை.

வாழ்த்தி விட்டு போவதை விட்டு குழந்தை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக எங்கள் சொந்த வாழ்க்கையில் அவர் தலையிட்டதை நான் விரும்பவில்லை. குழந்தை பற்றி மற்றவர்கள் பேசுவது தேவையற்றது. குழந்தை பெற்றுக்கொள்வது அவரவரின் சொந்த விஷயம். அதில் யாரும் தலையிடக்கூடாது. தயவு செய்து இனிமேல் பெண்களிடம் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள் என்று யாரும் கேட்க வேண்டாம்”.

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிசேரியன் பிரசவங்களின் அதிகரிப்புக்கு என்ன காரணம்?..!!
Next post அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? சென்னையில் சூதாட்டம்..!!