ஒரே வாரத்தில் சரும சுருக்கங்களைப் போக்க வேண்டுமா அப்ப தினமும் இத பண்ணுங்க..!!
நம் அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் பழக்கவழக்கங்களால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சீக்கிரமே சருமம் சுருங்க ஆரம்பிக்கின்றன. இப்படி சருமத்தில் சுருக்கங்கள் வருவதால், அது இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைத் தருகிறது.
இதனைத் தடுப்பதற்கு என்ன தான் கடைகளில் க்ரீம்கள் விற்கப்பட்டாலும், அவற்றில் கெமிக்கல்கள் இருப்பதால், தற்காலிக பலன் கிடைக்குமே தவிர நிரந்தர பலன் கிடைக்காது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் நேச்சுரல் ஆன்டி-ஏஜிங் க்ரீம்மை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று கொடுத்துள்ளது.
தேவையான பொருட்கள்: பாதாம்/ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் முட்டை மஞ்சள் கரு – 1
செய்முறை #1 முதலில் ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து, தனியாக 5 நிமிடம் வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #2 பின் முகத்தை நீரால் நன்கு கழுவி விட்டு, துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
செய்முறை #3 பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
செய்முறை #4 பின் 1/2 மணிநேரம் கழித்து, ஈரமான துணியால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், ஒரே வாரத்தில் சரும சுருக்கங்களைப் போக்கலாம்.
Average Rating