இளையராஜா விவகாரத்தில் முக்கிய முடிவு..!!
Read Time:1 Minute, 13 Second
எனது அனுமதி பெறாமல் நான் இசையமைத்த பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, நான் இனிமேல் அவரது பாடல்களை பாடமாட்டேன் என பாலசுப்பிரமணியம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் இசையமைப்பாளர்கள் இளையராஜாவை அவரது இலத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
அந்த சந்திப்பின்போது இசையமைப்பாளர்கள் தங்களின் ஆதரவை இளையராஜாவுக்கு தெரிவித்துள்ளனர். காப்புரிமை குறித்து இசையமைப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இளையராஜாவே செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
Average Rating