நீதிபதியை செருப்பால் அடித்த பாலியல் குற்றவாளி..!!
Read Time:1 Minute, 21 Second
இந்தியாவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவன் நீதிபதியை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. வயநாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற நபரே குறித்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
12 வயது சிறுமியை பாலியல் துன்புறுதல் செய்த வழக்கில் ஆறுமுகம் வயநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி பஞ்சாபகேசன், ஆறுமுகத்திற்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த ஆறுமுகம் தனது செருப்பை எடுத்து நீதிபதி மீது சரமாரியாக வீசியுள்ளார். இதில், காயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த செயலில் ஈடுபட்ட ஆறுமுகம் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating