மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் அட்டை: அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!

Read Time:2 Minute, 38 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு அதிகாரிகள் தற்போது ஆதார் அட்டை வழங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சமீப காலமாக ஆதார் அட்டையைச் சுற்றி எக்கச்சக்க களேபரங்கள் நடந்து வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஒவ்வொன்றிற்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு.

மறுபக்கம் உச்சநீதிமன்றமோ அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் அவசியம் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வி.வி.ஐ.பிகளின் ஆதார் விவரங்கள் வரிசையாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனியின் ஆதார் விவரங்கள் வெளியாகி வைரலானது.

அதற்கு டோனி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே ஆதார் பாதுகாப்பில்லை எனக் கூறி வந்தவர்களின் குரல் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேலும் வலுப் பெற்றுள்ளது.

அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் 1996 ஆம் ஆண்டு மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. அவர் கடைசியாக குடியிருந்த தி. நகர் வீட்டு முகவரிக்கு அவரின் இயற்பெயரான விஜயலட்சுமி ராமலு என்ற பெயருக்கே இந்த ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அப்பா பெயர், வீட்டு முகவரி என அத்தனையும் அப்படியே இருப்பதுதான் அதிகாரிகளின் பணியை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

‘விசாரித்துப் பார்க்காமல் எப்படி ஆதார் அட்டை வழங்க முடியும்? யார் வேண்டுமானாலும் பொய்த்தகவல்களை அளித்து ஆதார் அட்டை வாங்கிவிடலாமா? போன்ற தொடர் கேள்விகளுக்கு பதிலில்லை.

சில மாதங்களுக்கு முன் அனுமாருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை..!!
Next post உடலுறவின்போது இந்த தவறுகளையெல்லாம் செய்யாதீங்க… ப்ளீஸ்..!!