உ.பி.யில் இளைஞருக்கு மொட்டையடித்தது ஆன்டி- ரோமியோ போலீஸ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 42 Second

police (23)உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூரில் இளைஞர் ஒருவருக்கு ’ஆன்டி- ரோமியோ’ போலீஸார், மொட்டையடித்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘ஆன்டி-ரோமியோ’ போலீஸாரால் உருவாக்கப்பட்ட குழு மாநிலத்தின் ரோமியோக்களையும், இளம் ஜோடிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

கடந்த வாரம் இக்குழுவினரிடம் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடியினர் சிக்கியுள்ளனர். இவர்களை போலீஸார் விசாரித்தபோது உடனிருந்த இளைஞர் யாரென்றே தெரியாது என அப்பெண் கூறியதால் அவரை அனுப்பிவிட்டு அந்த இளைஞருக்கு மொட்டியடித்துள்ளனர் போலீஸார்.

தற்போது, இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் போலீஸாருடன் சில உள்ளூர் பொதுமக்களும் இணைந்து செய்ததாக வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டிருந்த போலீஸார் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக உ.பி. உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் இதுவரை புகார் அளிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைய தளபதி விஜய்க்காக ஓடி வந்த கமல்- இது தெரியுமா?..!!
Next post உடலுறவின் போது பெண்கள் செய்யும் இந்த 4 விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்குமாம்..!!