கருத்தடை செய்த மனைவி: மகளை கர்ப்பமாக்கிய தந்தை..!!
பிரித்தானிய நாட்டில் மனைவி கருத்தடை செய்ததால் மகளை மிரட்டி கர்ப்பமாக்கிய தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Warwickshire நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
தந்தை பிரிந்து சென்றுவிட்டதால் தாயார் மற்றொருவரை மறுமணம் செய்து மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தாயார் ஏற்கனவே கருத்தடை செய்துவிட்டதால் அவர் மூலம் குழந்தை பிறக்காது என இரண்டாவது கணவருக்கு தெரியவந்துள்ளது.
ஆனால், தனக்கு ஒரு வாரிசு பிறந்தாக வேண்டும் என அவர் பிடிவாதமாக இருந்துள்ளார்.
வேறு வழியில்லாத காரணத்தினால் தனது சொந்த மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு மனைவி ஆலோசனை கூறியுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கணவர் தன்னுடைய மகளாக பார்க்க வேண்டிய சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளார்.
மேலும், பல முறை இக்கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். எனினும், இவ்விவகாரம் வெளியே தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் சிறுமிக்கு குழந்தையும் பிறந்தது. இச்சம்பவத்திற்கு பிறகு தான் பெற்றோரின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொலிசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் பெற்றோரை கைது செய்தனர்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது சிறுமியை கற்பழித்த நபருக்கு 18 ஆண்டுகளும், தாயாருக்கு 6 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Average Rating