சுவீடனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொறி: இதுவரையிலும் 3 பேர் பலி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 13 Second
சுவீடன் நாட்டில் மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று பாய்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவீடன் தலைநகரான Stockholm நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைநகரில் உள்ள Drottninggatan என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விற்பனை நிலையம் ஒன்றில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று திடீரென நுழைந்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடும் நிகழ்ந்துளது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இது தீவிரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Average Rating