கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆட்டம்…மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்..!!
தமிழ்நாட்டில் மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டதை சேர்ந்தவர் கணேசன், இவர் மனைவி வெண்ணிலா.
கணேசன் கோவையில் தங்கி வேலை செய்து வந்தார், அப்போது உடன் வேலை செய்யும் பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த வெண்ணிலா தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 17ம் திகதி கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த கணேசன், மனைவி வெண்ணிலாவை அடித்துக் கொலை செய்ததுடன் வீட்டிலேயே சடலத்தை புதைத்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளியான கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் குறித்த பெண்ணுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
Average Rating