கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..!!
போதையில் கணவர் தகராறு செய்ததால் கோபத்தில் அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு தவமணி மற்றும் தமிழ்மணி என இரண்டு மனைவிகள் உள்ளனர்.
கணபதியின் இரண்டாவது மனைவி தமிழ்மணி கணவருடன் சண்டை போட்டு கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், நேற்று முழு மது போதையில் தமிழ்மணி வீட்டுக்கு சென்ற கணபதி அவருடன் சண்டை போட்டுள்ளார்.
அப்போது தமிழ்மணி கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு கொண்டிருந்தார்.
கணவர் மீது திடீரெனெ ஆத்திரபட்ட தமிழ்மணி கொதிக்கும் எண்ணெயை கணபதி முகத்தில் ஊற்றினார்.
வலியால் துடித்த கணபதியை மீட்ட அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு சிகிச்சையளிக்கபட்டு வரும் வேளையில் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating