எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் அழகியாக தேர்வு: கண்ணீர் விட்டு அழுகிய தருணம்..!! (வீடியோ)
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் காங்கோ நாட்டினருக்கான போட்டியில் அழகியாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவர் Horcelie Sinda Wa Mbongo. 11 வயதில் Horcelie Sinda Wa Mbongo எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
22 வயது ஆகும், இவர் இளங்கலை பட்டப்படிப்பு மாணவியாக உள்ளார். ஆனால் இவர் காங்கே நாட்டைச் சேர்ந்தவர்.
தற்போது இவர் எயிட்சால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானியாவில் வாழும் காங்கோ நாட்டவர்களுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மற்ற சாதாரண பெண்களுடன், எயிட்சால் பாதிக்கப்பட்ட சிண்டா வா போங்கோவும் கலந்து கொண்டார்.
போட்டியின் அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து Miss Congo UK 2017 போங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் ஏதாவது சிறப்பாக செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இந்த பட்டம் மூலம் மக்களின் மனதில் நான் இடம்பிடித்திருப்பது இதில் மிகவும் முக்கியமானது என போங்கோ தெரிவித்துள்ளார்.
La victoire de @Horcelie_sinda, #MissCongoUK, met en lumière la vie de millions d'Africains qui souffrent du #VIH 🎥🎥🎥https://t.co/kNmhy5453l pic.twitter.com/b8X2EinloF
— bbcafrique (@bbcafrique) April 4, 2017
Average Rating