சுந்தர் சி யின் முக்கால்வாசி படங்கள் காப்பி தான் – திடுக்கிடும் தகவல்..!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நந்தினி’ என்ற திகில் தொடரை நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. தயாரித்து இயக்கி வருகிறார். பாம்பு, பேய், ஆவி, செய்வினைகள் நிறைந்த இந்த சீரியல் தினசரி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிலையில்
இந்நிலையில் நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும், இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், “ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டார் இயக்குநர் சுந்தர் சி.
நந்தினி என்னோட கதை. இந்தக் கதையை என்கிட்ட வாங்கிட்டு அவர் சொன்னது, ‘உங்களுக்கு பணம்தானே பிரச்சினைனா அதை நான் பாத்துக்கிறேன். உங்க குடும்பத்துக்கு தேவையானதை நான் செய்கிறேன் என்று சொன்னார, ஆரம்பத்தில் சில பணம் கொடுத்தது உண்மை தான், ஆனால் அதன் பிறகு கேட்டால் கோபமாக பேசி என்னை தட்டி கழிக்க பார்க்கிறார்.
வேலை செய்ததுக்குத்தான் பணம் கேட்கிறோம்.கடவுள் உங்களுக்கு எல்லா தண்டனையும் கொடுப்பான். நந்தினி என் கதைன்னு உங்க வாயால சொல்ல வைப்பான் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவர் எடுத்த 90சதவீதம் படங்கள் மற்ற மொழிகளின் காப்பி தான், அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்,
Average Rating