கள்ளக்காதலியுடன் உல்லாசம்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு..!!
தேனி மூவேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் கபிலன். இவருக்கும் நதியா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கபிலன் புதுக்கோட்டையைச் சேர்நத ரம்யா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.
மனைவியின் நகைகள் அனைத்தையும் பறித்து வைத்துக் கொண்டு மேலும் 20 பவுன் நகை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நதியா புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்த தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மனைவியை கொடுமைப்படுத்திய கபிலன், மாமியார் சுசீலா, கள்ளக்காதலி ரம்யா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Average Rating