பாடகிக்கு 3000 ரூபாய் கொடுத்து உதவிய ஆட்டோ ஓட்டுநர்: நெகிழ வைக்கும் சம்பவம்..!!

Read Time:1 Minute, 39 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90இந்தியாவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பணம் இன்றி தவித்த பாடகிக்கு தக்க சமயத்தில் பணம் கொடுத்து உதவிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த பாடகி வரிஜாஸ்ரீ வேணுகோபால் தனக்கு பணம் கொடுத்து உதவிய ஆட்டோ ஓட்டுநருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், அவசரமான சூழ்நிலையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் 3000 ரூபாய் கொடுத்து உதவினார் என குறிப்பிட்டுள்ளார்.

வரிஜாஸ்ரீ, கடந்த ஏப்ரல் 11ம் திகதி விசா நேர்கானலுக்காக ஐதராபாத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து விசா அலுவலகம் செல்ல ஆட்டோவில் பயணித்துள்ளார்.

ஏடிஎம் கார்டில் பணம் வரிஜாஸ்ரீ, கையில் 2000 ரூபாய் வைத்திருந்துள்ளார். இந்நிலைியல் நேர்கானலுக்கு 5000 தேவைப்பட்ட நிலையில் ஏடிஎம் களில் பணம் எடுக்க திண்டாடியுள்ளார்.

இந்நிலையில், வரிஜாஸ்ரீவின் நிலையை உணர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னிடமிருந்து பணம்கொடுத்து உதவியுள்ளார். இச்சம்பவத்தை வரிஜாஸ்ரீ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட பலர் அதை பாராட்டி பகிர்ந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காண்டம் விளம்பர சர்ச்சை – அசராத சன்னி லியோன்..!!
Next post முகவரி கேட்பது போல் நடித்து கழுத்தை நெரித்து திருடர்கள் கைவரிசை! பெண்களையும் நம்பமுடியவில்லை..!! (வீடியோ)