சருமத்தினை பாதுகாப்பதற்கு சிம்பிளான சில டிப்ஸ்கள்..!!

Read Time:3 Minute, 2 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90கோடையில் சிறிது நேரம் வெளியில் சென்று வந்தால் கூட சூரிய ஒளிபட்டு நமது சருமம் கருமையடையும்.

இந்த சமயத்தில் வெயிலில் நேரடியாக நம் மீது படாதவாறு குடை போன்றவற்றினை உபயோகிக்க வேண்டும், இதனால் சரும பிரச்சனைகள் வெகுவாக குறையும்.

வெயில் காலத்தில் அல்ட்ரா வயலட் அதிகமாக வெளிபடுவதால் முடி வறட்சி அடைந்து வளர்ச்சி தடைபடும். இதனை தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயினை சூடுபடுத்தி மசாஜ் செய்யலாம்.
வெயிலினால் அதிகம் வேர்க்குரு ஏற்பட்டால் நுங்கு தண்ணீரை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் சரியாகிவிடும்.

வெப்பத்தினால் தலையில் ஏற்படும் அரிப்பினை தடுக்க எண்ணெய் சூடுசெய்து மசாஜ் செய்யவேண்டும். சிறிது வேப்பிலையுடன் மூன்று சிறிய வெங்காயத்தினை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் அரிப்பு சரியாவதுடன் முடி மென்மையாக இருக்கும்.

இரவில் படுக்கும் முன்னர் துளசி பொடி, மஞ்சள் பொடி, வேப்பிலை பொடியினை போட்டு தேங்காய் எண்ணெய் உடலில் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் அரிப்பு சரியாகிவிடும்.

கிர்ணி, தர்பூசணியின் சாறினை முகத்தில் தேய்த்து கழுவினால் வெயிலால் முகம் கறுப்பதை தடுக்கலாம்.
கற்றாலை சாற்றினை உடலில் தேய்த்து குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும்.

வெயிலினால் ஏற்படும் பொடுகு தொல்லையினை தடுக்க ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயினை கலந்து தேய்த்து குளிக்கவேண்டும்.

குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பினை போட்டு குளிப்பதால் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் குறையும்.

கடலை மாவு, பயித்த மாவினை உபயோகித்து குளிப்பதால் சருமம் மென்மையடையும்.
ஷீ அணியும் போது பு பவுடரை போட்டு பின் ஷாக்ஸை அணிந்தால் அதிகம் வியர்க்காது.
வேப்பிலை சாற்றினை 10 நிமிடத்தினை ஒரு முறை என்று முகத்தில் ஒத்தடம் கொடுத்தால் பரு பிரச்சனை குறையும்.

வெளிர் நிற பருத்தியலான உடைகளையே அதிகமாக அணிய வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரகசியமாக இத செய்தா இன்பம் சும்மா அள்ளிக்கொண்டு வருமாம்..!!
Next post வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!!