மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை..!!
Read Time:1 Minute, 3 Second
தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மைதிலி (19). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
ஆனால் அவரை மைதிலிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மைதிலி கடந்த 26-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு கொண்டார். இதில் மயங்கி விழுந்த அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு மைதிலி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேதுபாவா சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating