பள்ளி மாணவியை லாட்ஜில் அடைத்து கற்பழிப்பு: வாலிபர் கைது..!!

Read Time:2 Minute, 45 Second

201705011647583880_Teenager-in-love-with-molestation-the-young-men-arrested_SECVPFதிருவனந்தபுரத்தை அடுத்த மாரிய நாடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

அந்த மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் இது பற்றி நேமம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவி, திடீரென மாரிய நாடு பகுதியில் உள்ள பஸ் நிலையம் அருகே தனியாக நின்று கொண்டிருந்தார். அவரை ரோந்து போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போது தன்னை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அஜித் ஆண்டனி (வயது 21) என்பவர் காதலித்து வந்ததாகவும், அவர் தன்னை திருமண ஆசை காட்டி கன்னியாகுமரி மற்றும் இடுக்கி பகுதிகளுக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தார்.

கன்னியாகுமரிக்கு சென்றபோது அங்குள்ள ஒரு லாட்ஜில் தன்னை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் அந்த மாணவியை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

இதற்கிடையே மாணவியை கற்பழித்த வாலிபரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வாலிபர் அஜித் ஆண்டனியை தேடி வந்தனர். இதில் அவர் பெங்களூருக்கு தப்பி செல்ல கொச்சுவேளி ரெயில் நிலையத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் இது போல வேறு மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெட்ட சகுனம்..!! (கட்டுரை)
Next post இந்தி வசூலில் புதிய மைல் கல்லை தொட்ட பாகுபலி-2..!!