பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் ஆடையை களைந்து விசாரணை நடத்திய பொலிஸ்..!!
பாலியல் பலாத்காரத்தினால், பாதிக்கப்பட்ட 14 வயதான சிறுமியை விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி சிறுமியின் ஆடைகளை வலுகட்டாயமாக களைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரியானா டி.ஜிபிக்கு அறிவிப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்துமாறு அரியானா அரசாங்கமும் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் முக்கியமானது எனவும் சிறுமியின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அரியானா உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ராம் நிவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததது எனவும் யார் தவறு செய்து இருந்தாலும் தப்பிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையின் ஊடாக மனு ஒன்றை சமர்பித்துள்ளார்.
பாலியல் பலாத்காரத்தை அடுத்து விசாரணை நடந்த போது பொலிஸ் அதிகாரி தன்னை ஆடையின்றி நிற்க செய்து, பாலியல் பலத்காரத்தை சோதிப்பதாக கூறி தன்னை தொட்டார்.
இந்த பாலியல் தொல்லை தொடர்பாக மாநில டிஜிபியிடம் புகார் செய்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சிறுமி தந்தை ஊடாக சமர்பித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் திகதி பாலியல் பலாத்காரம் தொடர்பாக முறைப்பாடு செய்ததாகவும் நவம்பர் 23-ம் திகதி சிறுமியை விசாரணைக்கு அழைத்து சென்ற பொலிஸ் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating