2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.. இதை ட்ரை பண்ணுங்க..!!
சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்கி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இயற்கையில் உள்ள ஓரு அற்புதமான ஃபேஸ் பேக்..
மாதுளை தோல் தான் இந்த ஃபேஸ் பேக்கில் முக்கிய பொருளாக உள்ளது. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
தேவையான பொருட்கள்
மாதுளை தோல் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 3 துளிகள்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
மாதுளை தோல் பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரிக்கச் செய்கிறது.
Average Rating