வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு மூச்சுவிட முடியலையா?..!!
ஒருசிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு மூச்சுவிட முடியாமல் வயிற்றை இறுக்கி பிடிக்கும் பெல்ட் அல்லது இடுப்பு துணியை லூசாக்கிவிடுவர்.
இது மிகவும் தவறு, வயிறுமுட்ட சாப்பிட்டபின் பெல்டை லூசாக்குவதால் குடலில் திடீரென்று ஏற்படும் மாற்றத்தினாலும் அதிகமாக இருக்கும் உணவினாலும் குடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதனால் குடல் பாதிக்கப்பட்டு செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாப்பிடவுடன் குளிப்பதும் மிக தவறு.
குளிக்கும் போது உடல் குளிர்ச்சி அடைவதால் இரத்த ஓட்டமானது குறைந்து அஜீரணக்கோளாறினை ஏற்படுத்தும்.
சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உணவு எளிதில் செரிமானம் அடையும். ஆனால் உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்தே நடக்க வேண்டும்.
கடினமான வேலைகளை உணவிற்கு பின் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். உணவு உண்ட பின் உடனடியாக தூங்காமல் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.
சாப்பிடவுடன் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் 10 மடங்கு அதிகமாகும்.
அதே போல் வாழைப்பழம் சாப்பிடுவதாலும் ஜீரண கோளாறுகள் உண்டாகும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்கு பின்னரே பழங்களை எடுத்து கொள்ளவேண்டும்.
Average Rating