காஷ்மீரில் கொட்டும் பனியில் காதல் காட்சிகளை படமாக்கிய ரங்கா படக்குழு..!!

Read Time:2 Minute, 15 Second

201705081816534177_ranga2._L_styvpfபாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் `ரங்கா’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது.

இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். எனினும் அதற்கான சூழ்நிலை, அரசியல் ரீதியாகவும் இல்லை. பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் அச்சுறுத்திய நிலையில், காஷ்மீரில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக விஜய் கே செல்லையா தெரிவித்திருக்கிறார்.

முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது என்றார்.

தற்போது படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து விட்டோம், இங்கு அடிக்கும் வெயில் மிக கொடுமையாக இருக்கிறது என்று தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களை தாக்கும் புதிய நோய்..!!
Next post புறக்கணிக்கப்படும் கூட்டுறவுத் துறை..!! (கட்டுரை)