கல்லூரி மாணவியை கற்பழித்த அகதி: 15 ஆண்டுகள் சிறை தண்டனை?..!!
ஜேர்மனியில் கல்வி பயில சென்ற மாணவி ஒருவரை கொடூரமாக கற்பழித்து அகதி ஒருவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் ஜேர்மனியில் உள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வந்துள்ளார்.
இதேபோல், ஈராக் நாட்டை சேர்ந்த 32 வயதான அகதி ஒருவர் மேற்கு ஜேர்மனியில் உள்ள Bochum நகரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவியை அடிக்கடி சந்தித்து வந்த நபருக்கு அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மாணவி தனியாக அறையில் இருப்பதை அறிந்துக்கொண்ட நபர் உள்ளே நுழைந்து கொடூரமாக கற்பழித்துள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து மரபணு சோதனை மூலம் அகதியை பொலிசார் கைது செய்துள்ளனர். அகதி மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மாணவி தனது தாய்நாடான சீனாவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் அகதி மீதான வழக்கின் முதல் விசாரணை ஜேர்மன் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
தன்னை கற்பழித்தவருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என எண்ணிய மாணவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக மீண்டும் ஜேர்மன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் விசாரணை நிகழ்ந்தபோது தனக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளையும் நீதிபதியிடம் மாணவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மாணவியின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை மற்றொரு நாளுக்கு தள்ளி வைத்துள்ளார்.
அகதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating