ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 150-வது படம் குறித்த புதிய தகவல்..!!

Read Time:2 Minute, 21 Second

201705091633552236_New-Update-of-Action-King-Arjuns-150th-film_SECVPFசமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும் படம் `நிபுணன்’.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாக உள்ள இப்படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

`நிபுணன்’ என்பது படத்தின் கதாநாயகனான அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் `நிபுணன்’. இப்படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத் குமார், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

ஹாலிவுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி, அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை `நிபுணன்’ படம் பூர்த்தி செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் `நிபுணன்’. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், நவீனின் இசை அமைப்பில், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து பாஷன் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் டீசரை வருகின்ற மே 15-ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய அரசியல்வாதி: குவியும் பாராட்டுகள்..!!
Next post நோயற்ற வாழ்விற்கு சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்..!!