உடலுறவுக்குப் பின் இதெல்லாம் செய்யவே கூடாதாம்…!!
உடலுறவு என்னும் விஷயத்தை நம்முடைய முன்னோர்கள் வெறுமனே உடல்பசியையும் காமத்தையும் தீர்க்கும் விஷயமாகப் பார்க்கவில்லை. அதை ஒரு கலையாகவே பாவித்தார்கள். அதனால் உடலுறவுக்கு முன் என்ன செய்ய வேண்டும். உடலுறவுக்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாக எழுதியும் வைத்தனர்.
உடலுறவில் ஈடுபடும் முன் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. மது அருந்தக்கூடாது. கசப்பான நிகழ்வுகளை மனதில் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இதுபோல் உடலுறவில் ஈடுபட்ட பிறகும் உடனே சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவை என்னென்ன?
உடலுறவுக்கு முன் குளிப்பது நல்லது. ஆனால் உடலுறுவுக்குப் பின்பு உடனடியாகக் குளிக்கக் கூடாது. உடனே குளிக்கச் செல்வது அல்லது பிறப்புறுப்புக்களைச் சுத்தம் செய்வது கூடாது. குறிப்பாக, கருத்தரிக்க நினைப்பவர்கள் இதை செய்யவே கூடாது.
குளித்துவிட்டால் அந்த உடலுறவு மனநிலையில் இருந்து வெளியே வந்துவிடுகிறோம். அதனால் கொஞ்ச நேரம் அந்த மனநிலையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
உடலுறவில் ஈடுபட்டு முடிந்ததும் ஏதோ ஒரு வேலை முடிந்துவிட்டது என்று எழுந்து, அடுத்து நண்பர்களுடன் போன் கால்கள் பேசத் தொடங்கிவிடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது முழுமையான இன்பத்தைத் தராது.
ஆண், பெண் இருவரில் எவரேனும் ஒருவர் இந்தத் தவறை நிச்சயம் செய்துவிடுகிறார்கள். உடலுறவை முடித்துக்கொண்டவுடன் ஆண், பெண் இருவரில் எவரேனும் ஒருவர் உடனே தூங்கச் சென்றுவிடுகிறார்கள். அப்படி நிச்சயம் செய்யக்கூடாது. அது உங்கள் துணையை நிச்சயம் எரிச்சலூட்டும்.
உடலுறவுக்குப் பின், உங்கள் துணையுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பது, கொஞ்சுவது ஆகியவற்றை செய்யலாம்.
அதேபோல் உடலுறவை முடித்துக்கொண்ட பின், புத்தகங்கள் படிப்பது, அலுவலக வேலை செய்வது ஆகியவற்றைச் செய்யாதீர்கள்.
பெண்களைப் பொருத்தவரை, உடலுறவுக்குப் பின்புதான் ஆணின் அரவணைப்பை அதிகமாக நாடுவார்கள். அதனால் அந்த நேரத்தில் அவர்களிடமிருந்து விலகிப் போகாதீர்கள்.
உடலுறவுக்குப் பின் நிச்சயம் ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் தூங்க வேண்டும். கண்டிப்பாக, தனியே தூங்கக் கூடாது.
அதேபோல் குழந்தைகளை அழைத்து வந்து அருகில் படுக்க வைக்கக்கூடாது.
உடலுறவுக்குப் பின் உடனடியாக எழுந்து சாப்பிடச் செல்லக்கூடாது.
Average Rating