பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா..!!
‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடத்துக்கு முதலில் ஸ்ரீதேவியை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. நீண்ட கால்ஷீட் மற்றும் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. ரம்யா கிருஷ்ணன் நடித்ததால் அந்த வேடம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்திருக்கிறது.
இது போல், ‘பாகுபலி’ கதையை எழுதியதும் தேவசேனா பாத்திரத்துக்கு முதலில் நயன்தாராவை நடிக்க வைக்கத்தான் ராஜமவுலி விரும்பியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் நயன்தாரா பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால் ராஜமவுலி கேட்ட தேதிகளில் நயன்தாரா கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. இதனால் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவுக்கும் தமன்னாவுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.
ஆனால், ‘பாகுபலி-2’ல் அனுஷ்காவுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. இதனால் அவர்நடித்த தேவசேனா பாத்திரம் அதிகமாக பேசப்படுகிறது. இதில் நயன்தாரா நடித்திருந்தால் அவருக்கும் உலக அளவில் தனி இடம் கிடைத்திருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
Average Rating