ஒரே ஒரு புகைப்படத்தால் முடிவுக்கு வந்த உறவு..!!
திருமணமான கணவன் தனது மனைவியின் புகைப்படத்தை மிக நெருக்கமாக உற்றுநோக்கிவிட்டு அவளை விவாகரத்து செய்துள்ளார்.
திருமணவு உறவு விவாகரத்தில் முடிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது காரணமாக அமைவது உறவுமுறையில் துரோகம் செய்வது.
திருமணம் முடிந்த 20 நாட்களில் கணவர் வெளியூர் சென்றுள்ளார். அப்போது, தனது மனைவியிடம், உனது ஞாபகமாக இருக்கிறது, எனவே உன்னை புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பு, அதனை எனது கைப்பேசியில் வைத்து எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மனைவியும் படுக்கையறையில் அமர்ந்தவாறு, நன்றாக சிரித்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளார்.
புகைப்படத்தை பார்த்து ரசித்த கணவர் சிறிது நேரத்தில் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த புகைப்படத்தில் வேறு ஒரு ஆண் மகன் மறைந்திருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உறவுமுறையில் தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டாள் எனக்கூறி அவளை விவாகரத்து செய்துள்ளார்.
Average Rating