யாழ். சென்ற புகையிரதத்துடன் மோதியதில் இரு இளைஞர்கள் பலி..!!
Read Time:1 Minute, 12 Second
வவுனியா, புதூர் செல்லும் வீதியிலுள்ள புகையிரதக் கடவையில் இன்று புகையிரதத்துடன், உழவு இயந்திரம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற புகையிரதம், புதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்த உழவு இயந்திரமொன்றுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி ரவீந்திரன் கீர்த்தீபன் (21) மற்றும் உதவியாளரான ஜெகநாதன் ரவீதரன் (20) என்ற புதூர் மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating