கொடிய விஷம் கொண்ட பாம்பிற்கு முத்தம்: நடந்த விபரீத சம்பவம்..!!
Read Time:1 Minute, 27 Second
அமெரிக்காவில் கொடிய விஷம் கொண்ட பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற சிறுவனை அந்த பாம்பு தீண்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
புளோரிடா மாகாணத்தின் வட-கிழக்கில் உள்ள புட்ணம் பிரதேசத்தை சேர்ந்த ரெயினோல்ட் என்ற சிறுவன் கொடிய விஷம் கொண்ட பாம்புடன் விளையாடியுள்ளான்.
அதன் பின்னர், நான் பாம்புக்கு முத்தம் கொடுக்கப்போகிறேன் என சவால் விட்டு, அந்த பாம்பின் உதட்டில் முத்தமிட்டுள்ளான், ஆனால் பாம்பு அந்த சிறுவனை கொத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பாம்புக்கடியால் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் சுய நினைவோடு இருப்பதாகவும், ஆரம்பத்தில் மோசமான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முத்த முயற்சி சோதனையை தொடர்ந்து பாம்பு அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
Average Rating