மழைக்கு ஒதுங்கிய இரு இளம்பெண்களை கற்பழித்த எட்டு பேர் கொண்ட கும்பல்..!!
ஆந்திர மாநிலத்தில் மழைக்கு ஒதுங்கிய இரு இளம்பெண்களை தூக்கிச் சென்று கொடூரமாக கற்பழித்த எட்டு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள டஜாங்கி என்ற பகுதியில் கடந்த 20-ம் தேதி திருவிழா நடைபெற்றது. இதற்கான கலைநிகழ்ச்சிகளை காண்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். அப்போது, மழை பெய்ய ஆரம்பித்ததால் அவர்கள் அங்கு உள்ள கட்டிடத்தில் ஒதுங்கியுள்ளனர்.
அவர்கள் அங்கு ஒதுங்கியிருப்பதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி மகன் மற்றும் அவனது நண்பர்கள் அப்பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பலவந்தமாக கற்பழித்துள்ளனர். மற்றும் அவர்களின் நண்பர்களை அடித்து உதைத்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் நேற்று போலீசில் சென்று புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், காவல்துறை அதிகாரியின் மகனும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating