வேறு நபருடன் மனைவி… ஆனாலும் நேசிக்கும் கணவன்..!!

Read Time:7 Minute, 54 Second

sad_couple001.w245அபினவும் நானும் 2008-ல் முதன் முதலாக பார்த்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்துக் கொண்டோம். எங்கள் காதல் வாழ்க்கை பயணம் சாதாரணமாகவோ, ஸ்மூதாகவோ செல்லவில்லை.

ஆரம்பத்தில் நாங்கள் வெளியே சென்றோம். அபி போல ஒரு நல்ல நபரி இருப்பாரா என்ற வியப்பு எப்போதுமே எனக்கு இருந்தது. எல்லாருக்குமே அபியை பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன்.

நாங்கள் இருவரும் ஒருவர் மேல், ஒருவர் காதல் கொண்டிருந்தோம். இருவரும் வேரெதிர் துருவங்கள் தான். நான் பப்ளி, கேலி கிண்டல் செய்யும் ஆள். அவர் அதற்கு நேரெதிர். நான் எப்போதுமே அபியை மந்தமான நபர் என கூறுவேன்.

அபி என்னை உண்மையாக நேசிக்கிறார் என நான் அறிவேன். ஆனால், சினிமாவில் காண்பது போன்ற ரொமாண்டிக்கான விஷயங்கள் எதுவும் எங்கள் வாழ்வில் நடக்கவே இல்லை.

ஒரே வருடத்தில்!

நாங்கள் காதலிக்க ஆரம்பித்த ஒரே வருடத்தில் அவர் வேலை விஷயமாக வேறு நகரத்திற்கு மாற்று பெற்று சென்றார். மிகவும் தொலைவு, உடனே வந்து காண்பது அரிது. நான் எப்போதும் அசௌகரியமாக உணரவில்லை.

2011ல்!

2011ல் எங்கள் திருமணம் நிச்சயம் ஆனது.ஆரம்பத்தில் என் குடும்பத்தில் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு கலாச்சாரம் அது, இது என பல தடைகள். ஆனால், அபி நல்லவர் என தெரிந்ததும், அவரை எல்லாருக்கும் பிடித்துப் போனது.

மூன்று மாதத்திற்கு முன்…

எங்கள் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன், நான் விரும்பிய எனது கனவு வேலை எனக்கு கிடைத்தது. ஆனால், என் திருமணம் மற்றும், எனது வேலை ஒரே நேரத்தில் நடந்தது என் வாழ்வில் ஒரு பேரதிர்வாக தான் இருந்தது.

சச்சின்!

எனது புதிய அலுவலகத்தில் நான் சச்சின் என்ற நபரை சந்தித்தேன். சச்சினும் நானும் மிகவும் நேர்க்கமானோம். மணிக்கணக்கில் பேசினோம் அபியுடன் ஒப்பிடுகையில் சச்சின் மிகவும் வித்தியாசமான நபராக இருந்தார்.

கியூட், ஃபன் லவ்விங் பர்சன். எதுவாக இருந்தாலும் வெளிப்படியாக பேசுவார். படங்களில் இருப்பது போன்ற அந்த ரொமான்ஸ் நிறையவே சச்சினிடம் இருந்தது. சச்சினிடம் நான் எதையும் மறைக்கவில்லை.

தெரிந்தும்…

என்னை பற்றி அனைத்தும் தெரிந்தும், சச்சின் மற்றும் என்னால் எங்கள் உணர்வை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாங்கள் காதலிக்க துவங்கினோம். என்னால் இதை அபியிடம் இருந்து மறைக்க முடியவில்லை. ஸ்கைப்பில் பேசும் போது அவரிடம் சச்சின் பற்றி கூறினேன். அபி கண்ணீர் சிந்தினார். என் இதயம் நொறுங்கி போனது.

மன்னிப்பு!

அபியிடம் நான் மன்னிப்பு கோரினேன். எல்லாம் சரியாகிவிடும் என்று வாக்களித்தேன். ஆனால், என்னால் சச்சின் மேலான எனது உணர்வுகள் குறையவே இல்லை. எனது திருமண நாள் நெருங்கி கொண்டே இருந்தது. சச்சின் திருமணத்தை நிறுத்த சொல்லி கூறினார்.

நான்கு வருட உறவு!

ஆனால், 15 நாள் பழக்கத்திற்காக நான்கு வருட உறவை எப்படி உடைக்க முடியும். அபியுடன் எனக்கு ஒரு வலிமையான பாண்டிங் இருந்தது. அபி நிச்சயம் என்னை விட்டு இருக்க மாட்டார். நானும், திருமணத்தை நிறுத்த முயற்சிக்கவில்லை.

அபி!

அபி என்னை சச்சினுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ கூறினார். ஆனால், என்னால் இதை செய்ய முடியாது, நீயே திருமணத்தை நிறுத்திவிட்டு செல் என்றார். ஆனால், சச்சின் மீது என் உணர்வுகள் கட்டுப்படுத்த முடியவில்லை எனிலும், நான் அபியை திருமணம் செய்துக் கொண்டேன்.

தியாகம்!

திருமண வாழ்க்கை சந்தோசமாக இல்லை. நான் தியாகம் செய்தது போலவே உணர்ந்தேன். 15 நாட்கள் கழித்து அபி வேறு ஊருக்கு மாற்றம் பெற்று சென்றார்.

நான் இனிமேலும் சச்சினுடன் பேச கூடாது என முடிவு செய்தேன். ஆனால், நாளுக்கு நாள் சச்சினுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகரித்தது.

வேலை மாற்றம்!

நானும் வேலை மாற்றம் அணுகினேன். அதே போல அவரை நான் வாழும் நகரத்திற்கே மாற்றம் பெற்று வர கூறினேன். ஆனால் அபி அதற்கு சம்மதிக்கவில்லை. சச்சின் என்னை விவாகரத்து செய்துவிட்டு வா, உன்னை ஏற்று கொள்கிறேன் என கூறினார்.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அபி வந்து என்னை கண்டு செல்வார். நான் ஏமாற்றுகிறேன் என தெரிந்தும் அபி என்னை விரும்பினார். அந்த நாட்கள் என் வாழ்வில் மிகவும் நரகமாக இருந்தன.

ஒரு வருடம் கழித்து…

ஒரு வருடம் கழித்து எனக்கு வேலை மாற்றம் கிடைத்து. நான் அபியுடன் மகிழ்ச்சியாக வாழ துவங்கினேன். சச்சினை அதற்கு பிறகு நான் சந்திக்கவில்லை.

நாங்கள் இணைப்பில் தான் இருந்தோம். ஆனால், அந்த ரொமான்ஸ் இல்லாமல். சாதாரண நட்புடன். என் வாழ்க்கை மிகவும் மகிழ்சிகரமாக பயணிக்க துவங்கியது.

ஏன்? எப்படி?

நான் வேறு நபரை நேசிக்கிறேன் என தெரிந்தும் எப்படி என்னை நேசித்தாய், என்னுடன் வாழ விரும்பினாய் என அபியிடம் கேட்டேன். அதற்கு அபி,”நீ என்னை மிகவும் விரும்புகிறாய் என நான் அறிவேன்.

அது ஒரு மாயை என்றும் நான் அறிவேன். நீயாகவே என் காதலை உணர்ந்து மீண்டும் வருவாய் என நான் காத்திருந்தேன். கடைசியாக நான்கு வருட காதலே வென்றது என்றார்.”

உண்மையான காதல்!

அதன் பிறகு தான் நானும் அபியும் அதிகம் காதலிக்க துவங்கினோம். வேறு யாராலும் என்னை அபியை போல நேசிக்க முடியாது என்பதையும் நான் அறிந்தேன்.

நான் இன்றும் எனது தவறை உணர்ந்து வருந்துகிறேன். கூடிய விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது. எங்கள் வாழ்க்கை இப்போது மிகவும் அழகாக மாறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல மில்லியன் மக்களை கவர்ந்த இளம் பெண்ணின் நடனம்!! வைரலாகும் வீடியோ……!!
Next post ஆண்மைக் குறைபாட்டை தடுத்து விந்து வீரியத்தை அதிகரிக்கும் சித்த மருத்துவக் குறிப்புகள்..!!