தாயை கொலை செய்து இரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன்..!!

Read Time:2 Minute, 54 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)இந்தியாவின் மாராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள தனியார் ஊடகத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தவர் இந்திராணி முகர்ஜி.

இவரின் மகள் ஷீனா போரா என்பவரின் கொலை வழக்கை விசாரித்து வந்த குழுவில் காவல் ஆய்வாளர் தயனேஷ்வர் கனோர் முக்கிய பங்கு வகித்துவந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற கனோர்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் வீட்டிற்கு செல்லும்போது அவரது மனைவி, தீபாலி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கனோர் மற்றும் தீபாலியின் 21வயது மகன் சித்தாந்தை காணவில்லை என்பதும் தெரிய வந்தது.

கொலை நடந்த இடத்தில் “இவர்களால் நான் சோர்வடைந்துவிட்டேன், என்னை பிடித்து தூக்கில் போடுங்கள்” என இரத்தத்தால் எழுதப்பட்டு ஒரு ஸ்மைலி குறியீடும் வரையப்பட்டு இருந்தது.

இதனால் காவல் ஆய்வாளரின் மகன் சிந்தாந்த் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள சித்தாந்தையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட தீபாலியின் உடலில் 4 முதல் 5 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், அவர் செவ்வாய் இரவு 8 முதல் 9 மணிக்குள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் தீபாலியை யார் கொலை செய்தது என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிசுகிசு வந்தால் சந்தோசம் தான்.. நடிகை தான்யா கலகல பேட்டி..!!
Next post அடிபட்டு கிடந்த கீரி.. தண்ணீர் கொடுத்து காலை நீவி விட்ட காவலர்: வைரல் வீடியோ..!!