அனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை..!!

Read Time:2 Minute, 51 Second

201705271010283229_marriage-ban-Anushka-is-special-pooja-in-temple_SECVPFநடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், இன்னும் திருமணம் முடிவாகவில்லை. நடிகர்கள் ஆர்யா, பிரபாஸ் உள்பட சில கதாநாயகர்களுடன் இணைத்தும் பேசப்பட்டார்.

அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர். சிறப்பு வழியில் செல்லாமல் கையில் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுடன் பக்தர்கள் கூட்டத்தோடு அவர் வரிசையில் நின்றார்.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதி எதையும் அவர் கேட்கவில்லை. அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் சென்று இருந்தனர். கோவில் சன்னதி அருகில் வந்தபிறகுதான் பூசாரிகளுக்கு அவரை அடையாளம் தெரிந்தது. தட்டை வாங்கி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றும் திருமண தடை நீங்க பூஜை செய்தார். ஆனால் அனுஷ்காவின் தந்தை திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜைகளை நடத்தவில்லை என்று மறுத்தார்.

“லிங்கா படத்தில் அனுஷ்கா நடித்துக்கொண்டு இருந்தபோது கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். தற்போது அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருப்பதால் மீண்டும் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்” என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 வயதுக் குழந்தை தான் பயங்கரவாதியா ? (கட்டுரை)
Next post ஓடும் ரயிலில் இளம்பெண் அரங்கேற்றிய முகம்சுழிக்கும் செயல்… வைரலான காட்சி..!!