9 ஆம் வகுப்பு மாணவியை பள்ளியின் மேள் தளத்திலிருந்து தூக்கி எரிந்த ஆசிரியர்கள்: அதிர்ச்சியான காரணம்..!!

Read Time:1 Minute, 53 Second

muslim_school001.w245பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தால், மாணவியை ஆசிரியர்கள் பள்ளியின் மேல் தளத்திலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது மாணவி பஜ்ஜர் நூர். இவரை தனது பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி ஆசியர்களான புஷ்ரா மற்றும் ரெஹானா ஆகியோர் கூறியுள்ளனர்.

ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றொரு நாளில் வகுப்பறையை சுத்தம் செய்வதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர்கள், மாணவி பஜ்ஜர் நூரை அருகில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்து சென்று அவரை அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் இரு ஆசிரியர்களும் சேர்ந்து நூரை, பள்ளியின் மேல் தளத்திலிருந்து தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், 2 ஆசிரியர்களும், இந்த சம்பவத்தை மறைத்ததற்காக பள்ளியின் தலைமை ஆசிரியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவை..!!
Next post மர்மங்கள் நிறைந்த பாம்புகள் தீவு.. மனிதர்கள் உள்ளே சென்றால் ஆபத்தின் உச்சம்..!! (வீடியோ)