ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்: 4 சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!!

Read Time:1 Minute, 58 Second

murder_rape001.w245தமிழகம், திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் வீட்டிற்குள் புகுந்து, ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணையும் அவருடன் இருந்த சிறுமியையும் கத்தியால் வெட்டி விட்டு 4 சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் தோட்டக்காடு மேட்டுகாலனி கிராமத்தில் வசிப்பவர் சரண்ராஜ். அவரது மனைவி, தனது உறவினர் ஒருவரின் 3 வயது மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது தீடீரென வீட்டிற்குள் கஞ்சா போதையில் புகுந்த குறித்த சிறுவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

அந்த பெண் கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் சிறுமியின் கழுத்தை அவர்கள் அறுத்துள்ளனர்.

அதைத் தடுக்க முயன்ற குறித்த பெண்ணின் கையில் வெட்டிய சிறுவர்கள் பின்னர் தப்பியோடி விட்டனர்.

ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த பெண்ணும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

இரு குடும்பங்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெட்டப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன் மகளை தொலைக்காட்சிக்கு காட்டிய விவேக்..!! (வீடியோ)
Next post டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு..!!