வேறொருவரை மணந்த இளம் மனைவி… 62 வயது கணவரின் அதிரடி புகார்..!!
வேறொருவரை திருமணம் செய்து கொண்ட தன் இளம் மனைவியை கண்டுபிடித்து தருமாறு பொலிசில் புகார் செய்துள்ளார் 62 வயது கணவர் ஒருவர்.
தானேவை சேர்ந்தவர் சதீஷ் ஆப்தே(62). இவர் 23 வயது லிசா ஆப்தேவை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்தின் போது இவர்கள் எடுத்த செல்ஃபி புகைப்படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதையடுத்து அவர்கள் செல்ஃபி ஜோடி என்றே அழைக்கப்பட்டனர். இது காதல் திருமணம் என்று சதீஷ் கூறியதால், ’லவ்வுக்கு வயசு ஒரு பிரச்னையே இல்லை’ என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர் அந்தப் பகுதியினர். ஆனால் யார் கண்பட்டதோ, இந்த ஜோடி இப்போது பிரிந்திருக்கிறது.
‘என் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டார். இதற்கு காரணம் என் மைத்துனி மோனிகா தான். ஏனென்றால் அவருக்கும் என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. அதோடு வீட்டில் இருந்த நகைகளையும் மோனிகா எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தானே பொலிசில் புகார் அளித்துள்ளார் சதீஷ்.
இதையடுத்து லிசா பெற்றோர் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‘சதீஷ் பாலியல் ரீதியாக லிசாவை டார்ச்சர் செய்துள்ளார் என்றும் எங்கள் மகளை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்’ என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார் சதீஷ். ‘லிசாவுக்கு என் மீது அதிக காதல் இருந்தது என்றும் அவர் குடும்பத்துக்கு எங்கள் காதலில் விருப்பமில்லாததால் லிசாவினை குஜராத்தில் உள்ள ஒருவருக்கு ரகசியமாக திருமணம் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். லிசா இன்னும் என் மனைவி தான். நாங்கள் விவாகரத்து பெறவில்லை. அவரை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். தற்போது பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating