மனநிலை பெண் கற்பழித்து கொலை: வாய்க்கால் கரையில் உடலை வீசிச்சென்றனர்..!!

Read Time:2 Minute, 32 Second

201706291805166948_killed-woman-molestation-body-throw-Channel-in-trichy_SECVPFதிருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்த பேரூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருந்தனர்.

பெரியசாமி இறந்துவிட்டதால் சிவகாமி கூலி வேலைக்கு சென்று தனது மகள்களை வளர்த்து வருகிறார். இதில் 3-வது மகளான மாலா என்ற மாலதி (வயது 40), சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பகல் நேரங்களில் அந்த கிராமம் முழுவதும் சுற்றித்திரியும் அவர் அப்பகுதியினர் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிடுவார். இரவில் வீடு திரும்புவார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் மாலிதியை அந்த பகுதியில் காணவில்லை. மாறாக இரவிலும் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு பகுதியில் தேடிப்பார்த்தனர். ஆனால் மாலதி குறித்த எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையே இன்று காலை 6 மணியளவில் மாலதி பேரூர் ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள வடிகால் வாய்க்கால் கரையில் மாலதி பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நைட்டி உடை கிழிந்து இருந்தது. மேலும் மாலதியின் மார்பு மற்றும் கைகளில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

அவரை யாரோ மர்ம நபர்கள் ஏமாற்றி அந்த பகுதிக்கு அழைத்து வந்து கற்பழித்து இருக்கலாம் என்றும், அதனை தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த பகுதிக்கு ஜீயபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையுண்ட மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்துக்கொ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னணி நடிகை போல் பந்தா காட்டும் அதாகபட்டது மகாஜனங்களே நாயகி..!!
Next post விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்..!! (கட்டுரை)