இலங்கை வரும் ஜ.நா அதிகாரி..!!
Read Time:1 Minute, 14 Second
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையிடலாளர், பென் எமர்சன் ஜூலை 10ம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இவர் 14ம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என, தெரியவந்துள்ளது.
மனித உரிமை பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி நேரில் கண்டறிந்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இக் காலப் பகுதியில் எமர்சன், வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகத்துறை, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Average Rating