விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: 2 வயது குழந்தை பலியான பரிதாபம்..!!
சீனாவில் சிறுவர்கள் விளையாடியபோது 2 வயது குழந்தை ஒன்று 18-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள Changsha என்ற நகரில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் 3 குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
பின்னர், மூவரும் லிஃப்ட்டில் ஏறி மேல் தளத்திற்கு செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது, லிஃப்ட் திறந்ததும் சிறுவன் ஒருவன் 2 வயது குழந்தையை மீண்டும் தூக்கிச்சென்று லிஃப்ட்டில் நிற்க வைத்துள்ளான்.
லிஃப்ட் மூடியதும் அச்சத்தில் ஆழ்ந்த குழந்தை அழுதுக்கொண்டு லிஃப்ட்டின் கதவினை வேகமாக தட்டியுள்ளது.
சில வினாடிகளுக்கு பின்னர் 18-வது மாடியில் லிஃப்ட் திறந்ததும் குழந்தை தனியாக வெளியே நடந்து சென்றுள்ளது.
ஆனால், துரதிஷ்டவசமாக அருகில் இருந்த திறந்த ஜன்னல் வழியாக குழந்தை தவறி விழுந்துள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயம் ஏற்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.
குழந்தை தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating