பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அழகிய இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசிய இளைஞர்.. பொலிசாரிடம் தஞ்சம்..!!

Read Time:1 Minute, 52 Second

resham001.w245லண்டனில் இளம்பெண் மற்றும் அவர் உறவினர் மீது ஆசிட் வீசிய நபர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் Resham Khan (21) இவர் தனது உறவினரான Jameel Muhktar (37) என்பவருடன் கடந்த மாதம் 21ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது இருவரும் காரில் உட்கார்ந்திருக்க, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த ஆசிட்டை Resham மற்றும் Jameel முகத்தில் வீசி விட்டு தப்பியோடி விட்டார்.

இதையடுத்து வலியால் துடித்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். Resham மற்றும் Jameelக்கு முகம் மற்றும் கழுத்து பகுதியில் மிகப் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய John Tomlin (24) என்ற இளைஞர் தற்போது பொலிசில் சரணடைந்துள்ளார்.

அவரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆசிட் வீச்சுக்கு ஆளான Resham கூறுகையில், நான் நாசமாகிவிட்டேன், என் வாழ்க்கை இனி எப்போதும் போல இருக்குமா என யோசித்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

Jameel கூறுகையில், உணர்ச்சி ரீதியாக தான் உடைந்துவிட்டதாகவும், வலியால் தொடர்ந்து அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்ணா நோன்பு உடலுக்கு நல்லதா?..!!
Next post வர வர காதல் கசக்குதா? ஏன்னு தெரிஞ்சுக்க இத படிங்க..!!