நபரின் மீது ஏறி இறங்கிய கார் சக்கரம்: பின்னர் நடந்த அதிசயம்..!! (வீடியோ)
கார் மீது ஸ்கூட்டர் மோதிய போது அதிலிருந்த நபரின் மீது கார் சக்கரம் ஏறி இறங்கிய நிலையிலும், தலைகவசம் அணிந்திருந்தால் நபர் உயிர் பிழைத்துள்ளார்.
சீனாவின் Zhejiang மாகாணத்தில் இருக்கும் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், பரபரப்பாக இயங்கும் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அதன் அருகில் நபர் ஒருவர் ஓட்டி வந்த ஸ்கூட்டார் காரின் மீது உரசியுள்ளது.
இதையடுத்து ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுகிறார். அப்போது கண்ணிமைக்கும் நொடியில் காரின் பின் சக்கரம் கீழே விழுந்த நபரின் மீது ஏறி இறங்கியது.
பின்னர், அருகிலிருந்தவர்கள் உதவிக்காக செல்ல, 5 நிமிடங்கள் கழித்து கீழே விழுந்த நபர் தானாகவே எழுந்துள்ளார்.
தலையில் தலைகவசம் அணிந்திருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டதாக தெரிகிறது.
இது குறித்து போக்குவரத்து காவலர் Wu Jiayao கூறுகையில், தலைகவசம் அணிந்ததால் வீடியோவில் இருந்த நபர் உயிர் பிழைத்துள்ளார்.
தலைகவசம் அணியாமல் இருந்திருந்தால் மிக கடுமையான நிலையை அவர் சந்தித்திருப்பார் என கூறியுள்ளார்.
Average Rating