மூன்று நாட்களுக்கு முன்னர் விவாகரத்து செய்த மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்..!!
Read Time:1 Minute, 18 Second
நொய்டா பகுதியை சேர்ந்த குல்பாம் என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இந்த நிலையில், விவாகரத்து செய்த மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளர்.
புகாரில், தனது மகளை குல்பாம் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவளை கடுமையாக தாக்கியதாக கூறியுள்ளார்.
மேலும், குல்பாம் மற்றும் அவரது இரு சகோதரர்கள் சேர்ந்து தன் மகளை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குல்பாம் மற்றும் அவரது சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Average Rating