தணிக்கை குழுவில் சிக்கிய சூர்யா-ஜோதிகா படம்
சூர்யா-ஜோதிகா நடித்த `சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில், இருவரும் நெருக்கமாக நடித்த ஒரு காட்சிக்கு தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அந்த படத்துக்கு, `யு,’ `ஏ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்பட உலகின் பரபரப்பான நட்சத்திர காதல் ஜோடி, சூர்யா-ஜோதிகா. இவர்கள் இருவருக்கும் வருகிற 11-ந் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களின் திருமண பரிசாக, இரண்டு பேரும் ஜோடியாக நடித்த `சில்லுன்னு ஒரு காதல்’ என்ற படம், நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.
இந்த படத்தில், சூர்யா-ஜோதிகா ஜோடியுடன் இன்னொரு கதாநாயகியாக பூமிகாவும் நடித்து இருக்கிறார்.
நெருக்கமான காட்சி
படத்தில், சூர்யாவும், ஜோதிகாவும் கணவன்-மனைவியாக நடித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இரவு நேரத்தில், குழந்தையை தூங்க வைத்துவிட்டு, இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சி இடம் பெறுகிறது.
படம் தணிக்கைக்காக, தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது சூர்யா-ஜோதிகா நெருக்கமாக நடித்து இருந்த அந்த பாடல் காட்சிக்கு, தணிக்கை குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாடல் காட்சியில் குறிப்பிட்ட ஒரு பகுதியை நீக்கும்படி கூறினார்கள்.
அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல், டைரக்டர் கிருஷ்ணா, நடிகர் சூர்யா ஆகிய மூவரும் சம்மதிக்கவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
`யு,’ `ஏ’ சர்டிபிகேட்
ஆட்சேபத்துக்குரிய அந்த காட்சியை நீக்கினால், `யு’ சர்டிபிகேட் (அனைத்து தரப்பினரும் பார்க்க தகுதியான படம் என்ற சான்றிதழ்) கொடுத்து விடுவதாக தணிக்கை குழுவினர் தெரிவித்தார்கள்.
அதற்கு சூர்யா தரப்பு சம்மதிக்காததால், `சில்லுன்னு ஒரு காதல்’ படத்துக்கு, `யு,’ `ஏ’ (13 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரியவர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்) என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...