கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி: மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்..!!
Read Time:1 Minute, 25 Second
16 வயது சிறுமியை கூட்டாக நண்பர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்தவர் சன்னி. இவரது வீட்டின் எதிரில் ஒரு குடும்பம் வாடகைக்கு குடியுள்ளது.
அவர்கள் வீட்டில் இருந்த 16 வயது சிறுமியை சன்னி தனது வீட்டுக்கு கடத்தி கொண்டு வந்தார்.
பின்னர், அங்கிருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை சன்னி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பிறகு மூன்றாவது மாடியில் இருந்து சிறுமியை கீழே தூக்கி வீசியுள்ளார்.
அவர் கீழே விழுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சன்னியை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சன்னியின் நண்பர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.
Average Rating